Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (10:14 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு அவர் பெற்றுள்ளார் என்றும் இதனை அடுத்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் ஒரு மாதம் முழு ஓய்வு எடுக்க வேண்டிய நிலை இருக்கும் என்பதால் அமலாக்கத்துறை விசாரணையில் பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி.. கொடுத்த வாக்குறுதிகள்..!

மூன்றாவது முறை பிரதமரானதும் முதலில் ரஷ்யா செல்லும் மோதி - புதினுடன் என்ன பேசவுள்ளார்?

சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் ரவுடியிசம்? பட்டபகலில் யூட்யூபரை மிரட்டும் போதை ஆசாமிகள்! – வைரலாகும் வீடியோ!

இன்று இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் கனமழை.. சென்னையில் மழை பெய்யுமா?

முதல்வரின் புதுக்கோட்டை பயணம் திடீர் ரத்து.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments