Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில் பாலாஜியை அடுத்து பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Ponmudi
, திங்கள், 19 ஜூன் 2023 (16:58 IST)
போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
 
அமைச்சர் பொன்முடி கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த நிலையில் சட்ட விரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வடக்கை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.8.49 கோடி கொள்ளையடித்து... இலவச ஜூஸுக்கு மாட்டிக் கொண்ட தம்பதி