இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு: மாணவர்கள் ஆர்வம்

Webdunia
புதன், 30 மே 2018 (07:22 IST)
இதுவரை 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த கல்வியாண்டில் முதல்முறையாக 11ஆம் வகுப்பு என்று கூறப்படும் பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறையாக இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளது.
 
இன்று காலை 9 மணிக்கு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளதாகவும், இந்த தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறையின் இணைய தளங்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம்  மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கல்வியாண்டில் சுமார் 8 லட்சத்து 62 ஆயிரம் மாணவ - மாணவிகள் பிளஸ் 1 தேர்வுகளை எழுதியுள்ளனர் என்பதும் அவர்கள் அனைவரும் இன்று தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்று வெளிவரும் தேர்வு முடிவில் மாணவர்கள் பாஸ் ஆகவில்லை என்றாலும் அவர் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புகளுக்கு செல்லலாம் என்பதும், தேர்ச்சி பெறாத பாடங்களில் பிளஸ் 2 தேர்வின் இடையில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments