Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்மருவத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து; உயிர்தப்பிய பயணிகள்

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (15:32 IST)
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் அருகே திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனே பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.


 

 
இன்று காலை விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்து அருகே வந்தபோது எஞ்சினில் புகை கிளம்பியுள்ளது. இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பேருந்தை சாலை ஓரமாக நிறுத்த முயற்சித்துள்ளார். 
 
அதற்குள் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. உடனே ஓட்டுநர் உள்பட பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர். 
 
ஓட்டுநர் சுதாகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments