Publish Date: Wed, 29 Jun 2022 (15:51 IST)
Updated Date: Wed, 29 Jun 2022 (15:52 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளதால் தேர்வாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் குரூப்-1 தேர்வு நடந்தது என்பது தெரிந்ததே. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் சற்று முன் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளன
இந்த தேர்வில் 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது
நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஜூலை 13,14, 15 ஆகிய தேதிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது