Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும்..!

Mahendran
சனி, 13 ஜூலை 2024 (08:09 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இன்று நடைபெற உள்ளதை அடுத்து தேர்வு மையத்திற்கு தேர்வு எழுதுபவர்கள் 9 மணிக்குள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இன்று நடைபெறுகிறது என்பதும் மாநிலம் முழுவதும் 797 மையங்களில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
2 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று இந்த தேர்வை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் தேர்வர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகை தர வேண்டும் என்றும் அதற்கு பின் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments