Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவினர் கொடுத்த பொங்கல் டோக்கன் செல்லாது! – தமிழக அரசு அறிவிப்பு!?

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (08:35 IST)
தமிழக அரசு பொங்கலுக்கு வழங்கும் தொகைக்கு அதிமுகவினர் டோக்கன் கொடுத்தது செல்லாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் வழங்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் பொங்கலுக்கு, பொங்கல் தொகை ரூ.2500 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் டோக்கனை நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பதிலாக அதிமுகவினர் வழங்குவதாகவும், அந்த டோக்கன்களில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் திமுக நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் பதில் அளித்த தமிழக அரசு அனைத்து பகுதிகளிலும் தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஊழியர்களால் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாகவும், அந்த டோக்கனுக்கு மட்டுமே பொங்கல் பணம் அளிக்கப்படும் என்றும் இதுகுறித்த சுற்றறிக்கை இன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments