Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33% பணியாளர்களுடன் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதி!

Webdunia
வியாழன், 7 மே 2020 (11:23 IST)
மே 4ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட போதிலும் ஊரடங்கு உத்தரவு போன்றே தமிழகத்தில் எந்த பகுதியிலும் தெரியவில்லை. பேருந்துகள் ரயில்கள் தவிர மற்ற அனைத்தும் கிட்டத்தட்ட இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. கடைகள் திறக்கப்பட்டு கடைவீதிகளில் பொதுமக்கள் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர் குறிப்பாக இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டதால் டாஸ்மாக் 
 
கடைகளில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளும் திறந்துவிட்டதால் மது வாங்க திருவிழா கூட்டம் போல் மதுக்கடைகள் முன் இருப்பதால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இதனை அடுத்து டாஸ்மாக்கை அடுத்து கோவில்களையும் திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
 
டாஸ்மாக் திறக்கும் தமிழக அரசு கோவில்களையும் பள்ளிகளையும் ஏன் தரக்கூடாது என்ற கோரிக்கை எழுந்ததை அடுத்து இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 33 சதவீத பணியாளர்களுடன் கோவில்களை திறக்க தமிழக அரசு அனுமதித்து உள்ளதாகவும் இதனை அடுத்து விரைவில் அனைத்து கோயில்களும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments