Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அதிகரிப்பு

Webdunia
ஞாயிறு, 27 மே 2018 (17:33 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 
 
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட காரணம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் உள்ளது என்று அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இந்த சம்பவத்தை கண்டித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நிவாரணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments