Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்தப்பட்ட பெண் நித்தியின் ஆசிரமத்தில்..? – திருவண்ணாமலையில் அதிரடி ரெய்டு!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (13:06 IST)
சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்த கர்நாடக இளம்பெண் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிரடி ரெய்டு நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்கி அவருக்கு சேவகம் செய்து வந்தனர். இவரது இரண்டாவது பெண் தவிர மற்ற அனைவரும் ஆசிரமத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அவரது இரண்டாவது பெண்ணை தொடர்பு கொள்ள நாகேஷால் முடியவில்லை.

ஆசிரமத்தாரும் அதற்கு அனுமதி மறுத்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமங்கள் மீது அதிரடி ரெய்டுகள் தொடர்ந்தன. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நித்யானந்தாவிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் தப்பி தலைமறைவாக எங்கோ இருந்து வருகிறார்.

இந்நிலையில் மாயமான நாகேஷின் மகள் திருவண்ணாமலை நித்தியானந்தா ஆசிரமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகேஷ் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து நித்தியானந்தா ஆசிரமம் சென்ற போலீஸார் அங்கு அதிரடி ரெய்டை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு நாகேஷின் மகள் இல்லை என சோதனையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments