Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல்காந்தி, சரத்பவார் முன்னிலையில் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (12:41 IST)
எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரவுபதி முர்மு சமீபத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரதமர் மோடி உள்பட பாஜக பிரமுகர்கள் உடனிருந்தனர். 
 
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா தேர்வு செய்யப்பட்டார். இவர் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுவை தாக்கல் செய்தபோது காங்கிரஸ் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக செய்தியாளர்களிடம் யஷ்வந்த் சின்ஹா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments