Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 4 ஏடிஎம்களில் கொள்ளை! – திருவண்ணாமலையில் மர்ம கும்பல் கைவரிசை!

Webdunia
ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (09:41 IST)
திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் தொடர்ந்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும் வங்கிகளுக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரங்கள் பல பகுதிகளிலும் உள்ள நிலையில் இந்த ஏடிஎம்களில் சிலர் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே அவ்வபோது நடந்து வருகின்றன. ஆனால் திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை போளூரில் உள்ள ஏடிஎம்மில் ரூ.19.50 லட்சமும், பணிமனை ஏடிஎம்மில் ரூ.31 லட்சமும், மாரியம்மன் கோவில் அருகேயுள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சமும், கலசப்பாக்கம் பகுதி ஏடிஎம்மில் ரூ.2.50 லட்சமும் என மொத்தமாக ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது ஒரே கும்பலின் கைவரிசையா என்ற சந்தேகமும் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments