Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்; 2 நாளாக விடுமுறை! – திருவள்ளூரில் பரபரப்பு!

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (10:59 IST)
திருவள்ளூரில் தனியார் பள்ளி ஒன்றிற்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று இந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் போன் கால் வந்துள்ளது.

அதை தொடர்ந்து உடனடியாக பள்ளிக்கு விரைந்த போலீஸார் மாணவர்கள், ஆசிரியர்களை வெளியேற்றிவிட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்றும் அதே பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போன் கால் வந்துள்ளது.

ALSO READ: எலி பேஸ்ட் கலந்து குடுத்தேன்..! – மாணவன் கொலையில் சகாயராணி வாக்குமூலம்!

இதனால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டு சோதனையும் நடைபெற்று வருகிறது. அதேசமயம் போன் கால் செய்தது யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments