Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.10 ஆயிரம் சன்மானம்: திருவள்ளூர் காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (13:35 IST)
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அவர்கள் ரூபாய் பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருட்கள் அதிகம் நடமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து மாவட்ட காவல்துறை போதைப் பொருளை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விநியோகம் செய்பவர் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
மேலும் போதைப் பொருள் விநியோகம் குறித்த தகவல் தருபவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அவர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments