Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூர் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லையா? குறி வைக்கும் திமுக இளைஞரணி பிரபலம்..!

Siva
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (15:36 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருப்பூர் தொகுதியில் இடது கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட நிலையில் தற்போது இந்த தொகுதியை திமுக இளைஞரணி சேர்ந்த பிரபலம் ஒருவர் குறி வைத்திருப்பதாகவும் இதனால் இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்த தொகுதியில் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திருப்பூர் தொகுதியில் திமுக இளைஞரணி சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒருவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே  திமுகவே இந்த தொகுதியை வைத்துக் கொள்ளும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் திருப்பூரைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் திருப்பூரை விட்டுக் கொடுக்க அக்கட்சி விரும்பவில்லை

ஆனால் அதே நேரத்தில் திமுக வலியுறுத்தினால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. திருப்பூர் தொகுதி ஒருவேளை கிடைக்கவில்லை என்றால் நாகப்பட்டினம் மற்றும் தென்சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்க கம்யூனிஸ்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆவின் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விலை அதிகரிப்பா? அன்புமணி கண்டனம்..!

ஒரே நேரத்தில் இரண்டு புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

மகள்களை மீட்டுத் தரக்கோரி தந்தையின் ஆட்கொணர்வு மனு.. ஈஷா தரப்பு வாதம்..!

அக்டோபர் 22ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னைக்கு பாதிப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments