அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்: அதிர்ச்சியில் அதிமுக தலைமை

Webdunia
வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (08:09 IST)
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ போஸ் என்பவர் மாரடைப்பால் இன்று திடீரென மரணம் அடைந்தார். இதனால் அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ போஸ் அவர்களுக்கு திடீரென நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதால், மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே மரணம் அடைந்தார். அவருக்கு பதிலாக அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போஸ் என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மறைந்த எம்எல்ஏ ஏ.கே.போஸ் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகல் 1 மணிக்கு நேரில் அஞ்சலி செலுத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் சுரங்க பாதையில் சிக்கிய பொக்லைன் இயந்திரம்.. போக்குவரத்து பாதிப்பு!

மகளிர் உரிமை தொகையை இரண்டாவது கட்ட விரிவாக்கம்.. முதல்வர் இன்று தொடங்கி வைப்பு..!

ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறையினர்.. சென்னையில் அதிகாலை பரபரப்பு..!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments