Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விற்பனை இல்லாத 500 மதுக்கடைகளைத்தான் மூடுகிறார்களா? : புதிய தகவல்

Webdunia
வியாழன், 26 மே 2016 (14:37 IST)
சரியான விற்பனை இல்லாத 500 சில்லரை மதுபானக் கடைகளைத்தான் தமிழக அரசு மூட முடிவெடுத்துள்ளது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சட்டமன்ற தேர்தலின் போது, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும், பூரண மதுவிலக்கு என்ற கொள்கையை கடைபிடித்தனர். ஆனால், அதிமுகவோ படிப்படியாக மதுவிலக்கு என்று கூறியது. மக்கள் அதிமுகவைத்தான் தேர்ந்தெடுத்தார்கள்.
 
கூறியதுபோலவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா 500 சில்லரை மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த தொல். திருமாவளவன் “500 கடைகளை மூடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளதை வரவேற்கிறோம். ஆனால், அந்த கடைகளை அனைத்தும் சரியான வியாபாரம் இல்லாத மந்தமான கடைகள் என்று கூறப்படுகிறது.
 
அதேபோல், 12 மணிக்கு மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், மாலை 5 மணிக்கு மேல் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். 
 
முழுமையன மதுவிலக்குக்கு 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளாமல், 2 ஆண்டுகளிலேயே பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் உறுதியளிக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments