Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசிய கீதம் அவமதிப்பு - ராணுவ நிகழ்ச்சியில் 2 பத்திரிக்கையாளர்கள் வெளியேற்றம்

Webdunia
வியாழன், 26 மே 2016 (13:41 IST)
ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது, தேசிய கீதத்தை அவமதித்ததாக பத்திரிகையாளர்கள் 2 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
 

 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ராணுவப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீநகரில் நடந்த நிகழ்ச்சியில் மூத்தபிடிபி தலைவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான செய்யது பஷாரத் அகமது கலந்து கொண்டார்.
 
நிகழ்ச்சியின்போது தேசியக் கொடியை ஏற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் 2 பேர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
 
வெளியேற்றப்பட்ட பத்திரிகையாளர்களில் ஒருவரான ‘காஷ்மீர் ரீடர்’ செய்தியாளர் ஜூனைத் பஸாஸ் கூறுகையில், நிகழ்ச்சி குறித்து செய்திசேகரிக்கத் தான் ராணுவம் எங்களை அழைத்தது; தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது நான் செய்திக்கு குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தேன்; தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகுஎன்னிடம் வந்த கர்னல் பர்ன், நான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகக் கூறி அங்கிருந்து வெளியேறச் சொன்னார் என்று தெரிவித்தார்.
 
ஜூனைத் பஸாஸூடன் சேர்த்து வெளியேற்றப்பட்ட மற்றொரு பத்திரிகையாளர் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையைச் சேர்ந்தவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments