Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூர் தேர்தல் : இன்று மதியம் உயர் நீதிமன்றம் முக்கிய முடிவு

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (13:15 IST)
திருவாரூர் தேர்தல் குறித்த வழக்கை அவரச வழக்காக விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பிரசாத் முறையீடு செய்துள்ளார்.
திருவாரூர் தேர்தலை தள்ளிவைக்கக் கோருவதை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உயர்நீதிமன்றம் இன்று மதியம் முடிவு செய்யும் என தகவல் வெளியாகிறது.
 
இன்று காலையில் மற்றொரு நீதிபதிகள் அமர்வு இவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுத்திருந்தது. 
 
வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கஜாபுயல் தாக்குதலால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே  தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தமிழக அரசு ,உயர் நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments