Webdunia - Bharat's app for daily news and videos

Install App

303 வாக்குச்சாவடி,புகார் எண்(18004257035 ) - இடைத்தேர்தல் வேலைகள் ஆரம்பம்..

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (13:03 IST)
திருவாரூரில் தேர்தல் ஏற்பாடுகளைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் வாக்குச்சாவடி விவரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

திமுக தலைவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்ததை அடுத்து அவரின் தொகுதியான திருவாரூர்  5 மாத காலமாக காலியாக உள்ளது.அதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு இப்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து இந்த தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய பெரியக் கட்சிகள் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகள் இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட வில்லை. தேர்தலுக்கு இன்னும் 26 நாட்கள் உள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் இன்று ஆரம்பித்துள்ளது.

தேர்தல் பணிகளை ஆரம்பித்து வைத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ், திருவாரூரில் மொத்தம் 303 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும். தேர்தல் சம்மந்தமாக ஏதேனும் புகார்கள் தெரிவிக்க வேண்டுமென்றால் 18004257035 என்ற இலவச எண்ணுக்கு அழைத்துக் கூறலாம் என்றும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை” - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments