Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? விசிக தலைவர் திருமாவளவன் பதில்..!

Mahendran
புதன், 25 செப்டம்பர் 2024 (11:49 IST)
ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, 'சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன், துணை முதல்வராக கூடாதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருடைய இந்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தே அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனின் கருத்தால் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் எங்கள் சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

மேலும்  உட்கட்சி விவகாரங்களில் நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள்' என்றும், 'ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார்."

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments