சீமானை பழிப்பது குறையாது - இனி கழிப்பது இயலாது..! வைரமுத்து ட்விட்..!

Senthil Velan
திங்கள், 10 ஜூன் 2024 (13:17 IST)
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தமாக 8.19% வாக்குகளை பெற்றது. இதன் மூலம் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.
 
இந்நிலையில் தனது  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, மக்களவைத் தேர்தலில் 8.19 விழுக்காடு வாக்குகள் பெற்றுத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது
 
இந்த வளர்ச்சியால்
தமிழ்நாட்டு அரசியலில்
அவரைப்
பழிப்பது குறையாது
ஆனால் இனி –
கழிப்பது இயலாது
 
வாழ்த்துகிறேன் என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments