Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்ததால் பரபரப்பு

Webdunia
புதன், 31 மே 2023 (18:04 IST)
சென்னை மாநகர பேருந்து ஒன்று திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த காற்று வீசியதில், பேருந்தின் மேற்கூரை தூக்கிவீசப்பட்டது.

சென்னை மாநகர பேருந்து ஒன்று,  திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு நேற்று மாலை சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று காற்றுடன் கூடிய மழை பெய்தது.

பலத்த காற்று வீசியதில் அரசுப் பேருந்தின் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இதில், பேருந்திற்குள் அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து, பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டது.

பேருந்தில் வந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று செங்குன்றம் டிப்போவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசுப்பேருந்தின் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments