மழை சீசன் இன்னும் முடியல.. பொங்கல் வரை இருக்கு! வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (16:02 IST)

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வந்த நிலையில் இன்னும் பருவக்காலம் நிறைவு பெறவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வந்தது. கடந்த சில நாட்களாக மழை சற்று குறைந்துள்ள நிலையில் ஆங்காங்கே வெயிலும் வீசி வருகிறது. இதனால் பருவமழை காலம் முடிந்து விட்டதாக பலரும் நினைத்த நிலையில் பருவமழைக்காலம் முடியவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை. பொங்கல் வரை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த 2024ம் ஆண்டில் 143 மி.மீ அதிகம் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் நான்கு புயல்கள் ஏற்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

அடுத்த கட்டுரையில்
Show comments