Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர்! – தனிப்படை போலீஸ் தேடுவதால் தலைமறைவு!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (09:12 IST)
கிராம சபை கூட்டத்தில் குறைகளை சொல்ல வந்த விவசாயியை ஊராட்சி செயலாளர் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நேற்று காந்தி ஜெயந்தியையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் கிராமத்திலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சு ஒன்றிய அதிகாரிகள், மன்ற தலைவர், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் அம்மையப்பன் என்ற விவசாயி கிராம சபை கூட்டத்தை வெவ்வேறு இடங்களில் நடத்த வேண்டும் எனவும், ஊராட்சி செயலாளர்களை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனால் கோபமான ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்தார். இதனால் கீழே விழுந்து படுகாயமடைந்த அம்மையப்பனை அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தங்கபாண்டியனின் இந்த செயல் குறித்து மான்ராஜ் எம்.எல்.ஏ நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தங்கபாண்டியனை ஊராட்சி செயலாளர் பதிவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வன்னியம்பட்டி போலீஸார் தங்கபாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கபாண்டியனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வயநாடு தொகுதி இடைத்தேர்தல்.. தயாராகிறார் பிரியங்கா காந்தி.. மீண்டும் ஆனி போட்டி?

5 பேர் உயிரிழந்த துயரம்.. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்! திருமாவளவன்

ரத்தன் டாடா உடல்நலம் குறித்து வதந்தி.. எக்ஸ் பக்கத்தில் அவரே அளித்த விளக்கம்..!

இந்தியாவுக்கு வருகை தந்த மாலத்தீவு அதிபர்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை..!

கட்டுக்கடங்காத கூட்டம்.. டிக்கெட் இல்லாமல் மெட்ரோவில் பயணம் செய்த பொதுமக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments