Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் புகாருக்கும் தொடர்பில்லை.. தி குரூப் நிறுவனம் அறிக்கை..!

ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் புகாருக்கும் தொடர்பில்லை.. தி குரூப் நிறுவனம் அறிக்கை..!
, வியாழன், 28 செப்டம்பர் 2023 (07:46 IST)
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் நேற்று சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்த நிலையில், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளரும், 'தி குரூப்' நிறுவன உரிமையாளருமான செந்தில் வேலன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினரிடம் இருந்து இசை நிகழ்ச்சி நடத்த ரூ.29.50 லட்சம் வாங்கப்பட்டது என்றும், பிறகு நிகழ்ச்சி நடத்துவதற்கான தொகை அதிகரிப்பதால், நிகழ்ச்சியை சங்கத்தினர் ரத்து செய்தனர் என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் நிகழ்ச்சி ரத்து செய்தாலும் முன்பணத் தொகை திருப்பி வழங்கப்பட மாட்டாது என அக்ரீமெண்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இவை எல்லா இசை நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்றும்  ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளர் செந்தில் வேலன்
தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யாஷின் அடுத்த படத்தில் இணையும் ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!