Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு பிரியாணி வழங்கிய ஹோட்டல்....முண்டியடித்த கூட்டம்

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (19:03 IST)
இன்று உலகமெங்கும் மகளிர் தினவிழா கொண்டாடப்படுகிறது. எல்லோரும் சிங்கப் பெண்களுக்கு பாராட்டுகளும்,வாழ்த்துகளும் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி விற்கப்படும் என்ற அறிவிப்பால் அங்கு கூட்டம் கூடியது.

மற்ற உணவுகளைவிட பிரியாணிக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு, அதன் சுவைக்கும் மணத்திற்கும் உலகமே அடிமையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உப்புக்கறி உணவகம் உழைக்கும் பெண்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பிளேட் சிக்கன்  பிரியாணி 1 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தது.

இதனால் சிறியோர் முதல் முதியோர் வரை அனைவரும் அந்த ஹோட்டலில் வரிசையில் நின்றனர். பின்னர்  ஒருவருக்கு 1 டோக்டன் என்ற முறைப்படி 1 பாக்ஸ் பிரியாணி வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments