Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடல் போடுவதற்குள் கோபித்துக் கொண்டு சென்ற ஆளுனர்! - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்!

Prasanth Karthick
திங்கள், 6 ஜனவரி 2025 (12:42 IST)

தேசிய கீதம் இசைக்காததற்கு கண்டனம் தெரிவித்து ஆளுனர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

 

 

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால் தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுனர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார். தான் தேசியகீதத்தை ஒலிக்க கோரி உருக்கமாக வேண்டுகோள் விடுத்து அவர்கள் மறுத்துவிட்டனர் என ஆளுனர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள திமுக அமைச்சர் துரைமுருகன் “தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை ஆளுநர் கூறியுள்ளார். தேசியகீதம் குறித்து கடந்த முறையே ஆளுநருக்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். தமிழக சட்டப்பேரவையின் மரபின்படி, கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவதுதான் பின்பற்றப்படுகிறது.

 

ஆனால் மீண்டும் இதை ஒரு பிரச்சினையாக மாற்றி தனது உரையை வாசிக்காமல் ஆளுனர் வெளியேறியுள்ளார். இதன்மூலம் ஆளுனரின் நோக்கம் கேள்விக்குள்ளாகிறது. தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு மீது தமிழக அரசு எப்போதும் மரியாதை வைத்துள்ளது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு..!

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments