Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவனை கொல்ல முயன்ற கும்பல் : சென்னையில் தொடரும் கொலைவெறி சம்பவம்

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (15:02 IST)
அம்பத்தூர் அடுத்துள்ள அயப்பாக்கம் தேவி நகரில் வசித்து வருபவர் வேணு. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும்  பாபு என்ற மகன் உள்ளார். அவர் அருகே உள்ள அரசு பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்றைய தினத்தில் பாபு, டியூசன் முடிந்து இரவு தனது வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது இருவர் அவரை பின் தொடர்ந்து வந்திருக்கின்றனர். ஆனால் பாபு அவர்களைப் பார்க்கவில்லை. 
 
தன் வீட்டுக்குச் சென்ற பாபு களைப்பாக இருப்பதாகக் கருதி மாடிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து எட்டிக் குதித்து பாபுவை நெருங்கி அவரை சரமாறியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
 
அப்போது பாபு வலியால் கதறியுள்ளார். அவரது கூச்சல் கேட்டு வந்த பாபுவின் பெற்றோர் தங்கள் மகன் ரத்தம் பீறீட கீழே விழுந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
 
அதன்பின்பு பாபுவை  ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாபுவுக்கு தீவிரமான சிகிச்சை அளிகப்படுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
பாபுவை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments