மாற்று சான்றிதழில் சாதி பெயரை குறிப்பிடக்கூடாது - பள்ளிக்கல்வி துறை

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (17:05 IST)
பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிட வேண்டிய தேவையில்லையென பள்ளிக்கல்வி துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பள்ளி பாடத்திட்டங்களிலும், நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வி துறை செயல்படுத்தி வருகிறது. 
 
சமீபத்தில் 11ம் வகுப்புக்கும் பொது தேர்வு கொண்டு வந்ததும் அவற்றில் ஒன்று. இன்று பள்ளிக்கல்வி துறை வெளியிட்ட அறிவிப்பில் “பள்ளிகளில் வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிட தேவையில்லை.

வருவாய் அலுவலகத்தில் வழங்கப்படும் சாதி சான்றிதழே அனைத்து கோப்புகளுக்கும் போதுமானது என்பதால் மாற்று சான்றிதழில் சாதி என்னும் பகுதியில் “வருவாய் நிர்வாக ஆவணத்தில் பார்க்கவும்” என குறிப்பிட வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments