Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 15 பேருக்கு கொரோனா! – அதிகரித்த எண்ணிக்கை!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (08:55 IST)
தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 15 மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களில் 100க்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தஞ்சாவூர் கல்லூரி மாணவர்கள் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 கல்லூரிகளில் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments