Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளிலும் கொரோனா! – அதிர்ச்சியில் தஞ்சாவூர்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (12:12 IST)
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் தற்போது கல்லூரி மாணவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து ஆலத்தூர், தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

100க்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு 2 வாரம் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தஞ்சை மாவட்ட கல்லூரிகளிலும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் 2 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், திருவையாறு அரசு கல்லூரி மாணவர் ஒருவருக்கும், கும்பகோணம் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து தஞ்சாவூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments