ஓபிஎஸ் சின்ன பிள்ளைதனமாக பேசுகிறார் - தங்க தமிழ்ச்செல்வன்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (19:08 IST)
காளை மாடு கூட கன்று போடும், ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியது சின்ன பிள்ளைதனமானது என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
இன்று ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தினகரனை கடுமையாக சாடினார். ஜெயலலிதா இருக்கும்போதே தினகரன் முதல்வராக சதி செய்தார். காளை மாடு கூட கன்று போடும் ஆனால் தினகரன் கட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறினார்.
 
இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் பதிலளிக்கும் விதத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:-
 
அதிமுக ஆர்.கே.நகரில் சந்தித்த தோல்வியை ஒப்புக்கொள்ளட்டும். காளை மாடு கூட கன்று போடும், ஆனால் திகனரன் கட்சியை கைப்பற்ற முடியாது என ஓபிஎஸ் கூறியிருப்பது சிறு பிள்ளைதனமானது. தினகரன் ஓபிஎஸ்யிடம் தனது சதித்திட்டம் குறித்து கூறினாரா. அப்படியானால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments