Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் நீதிபதியை கொன்ற பயங்கரவாதிகள்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:04 IST)
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷரிப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஏற்கனவே, பொருளாதார நெருக்கெடி, மழையால் வெள்ளப்பாதிப்பு உள்ளிட்டை பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் பைடன் பயங்கரவாத நாடுகளில் ஒன்று பாகிஸ்தான் என கூறியுள்ள நிலையில், தற்போது முன்னாள் நீதிபதி ஒருவரை பயங்கரவாதிகள் கொன்ற சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தின் கரண் என்ற பகுதியில் மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த முன்னாள் நீதிபதி முகமது நூர் மெஸ்கசாய் மீது பயங்கரவாதிகள்  துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், காயம் அடைந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு முதல்வர் அப்துல்குத்தூஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மாமியாருடன் குடும்பம் நடத்தும் மருமகன்.. காவல்துறையில் மாமனார் அளித்த புகார்.

திருடர்கள் என்ற பழியை தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் சுமத்தலாமா.? முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம்..!!

நான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் ராகுல்காந்தி: செல்லூர் ராஜு

கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைக்க வேண்டும்..! முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்.!!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மறைவு எதிரொலி.. அதிபர் தேர்தல் நடத்த திட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments