Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்வெளி நிலையத்தில் இருந்து நாசா வீரர்களுடன் பூமிக்கு திரும்பிய விண்கலம்

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (22:01 IST)
உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்திற்கு 4 வீரர்களுடன் சென்றது.

இந்த விண்வெளி மையத்தில், 4 வீரர்களும்  6 மாத காலம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தனர்.  இந்த நிலையில் ஆய்வுப் பணி முடிந்து 4 வீரர்கள் பயணித்த விண்கலம்  நேற்று  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.

விண்வெளி  மையத்தில் இருந்து புறப்பட்ட சுமார் 5 மணி நேரத்திற்குப் பின் புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் உள்ள கடலில் பாராசூட்டின் மூலம் இறங்கியது.

இந்த நிலையில் தற்போது விண்வெளி மையத்தில், 3 அமெரிக்க வீரர்களும், 3 ரஷியர்களும்,  1 ஜப்பானியர் என 7 பேர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments