Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீலகிரியை அடுத்து தென்காசியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு..!

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (08:43 IST)
நீலகிரி மாவட்டத்திலுள்ள நான்கு முக்கிய பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
 
இந்த நிலையில் நீலகிரியை அடுத்து தென்காசி பகுதியில் சில கனமழை பெய்து வருவதை அடுத்து அந்த மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், கீழ்பாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை காரணமாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறைக்கு பதிலாக வேறு ஒரு நாளில் இந்த பகுதிகளில் பள்ளிகளுக்கு வேலை நாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments