Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைக்க ஆளுநர் முதல்வருடன் ஆலோசனை?

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (11:43 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்துவேன் என கூறியுள்ளார்.
 
தமிழக ஆளுநராக கடந்த செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட பன்வாரிலால் புரோஹித் தமிழக அரசு நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார். கோவையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனாலும் ஆளுநர் தொடர்ந்து மாவட்டம் வாரியாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திமுகவினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு சென்று அவருக்கு கருப்பு கொடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் நேற்று நடந்த விழா ஒன்றில் தமிழகத்தில் தெலுங்கு பள்ளிகள் அமைக்க வேண்டும் என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
வீரபாண்டிய கட்டபொம்மனின் 258-வது பிறந்த நாள் விழா மற்றும் தியாகராஜ சாமிகளின் 250-வது ஆண்டு விழா அகில இந்திய தெலுங்கு அமைப்பின் சார்பில் சென்னை நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டனர்.
 
இந்த விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழில் பேசினால் தமிழர்களின் மனதில் இடம்பிடிக்க முடியும். ஆந்திர மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருக்கும்போது, தமிழகத்தில் தெலுங்குப் பள்ளிகள் இருப்பதில் எந்த தவறும் இல்லை. தெலுங்குப் பள்ளிகள் அமைப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments