Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தறுத்து ஆசிரியை கொலை: கணவன் கைது

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (11:45 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முகப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் , இன்று சண்முகப்பிரியா தனது வீட்டில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அணிந்திருந்த சங்கிலி திருடுபோனதும், அவரது கழுத்தை துணி காயப் போடும் கயிரால் அறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணைக்காக அவரது கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments