Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழுத்தறுத்து ஆசிரியை கொலை: கணவன் கைது

Webdunia
திங்கள், 19 மார்ச் 2018 (11:45 IST)
ராமநாதபுரத்தில் பள்ளி ஆசிரியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது கணவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.
 
ராமநாதபுரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராஜா. இவரது மனைவி சண்முகப்பிரியா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் , இன்று சண்முகப்பிரியா தனது வீட்டில் கழுத்தறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் போலீசார்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர் அணிந்திருந்த சங்கிலி திருடுபோனதும், அவரது கழுத்தை துணி காயப் போடும் கயிரால் அறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், போலீசார் விசாரணைக்காக அவரது கணவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments