Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிடாஸ் மதுபான கொள்முதல் திடீர் நிறுத்தம்: டாஸ்மாக் அதிரடி

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (14:17 IST)
மிடாஸ் மதுபான ஆலை உள்பட சசிகலாவுக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மிடாஸ் மதுபான பெட்டிகளை இனி கொள்முதல் செய்ய போவதில்லை என்று டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.


 


ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் மொத்தம் 48 லட்சம் மதுப்பெட்டிகளை கொள்முதல் செய்கின்றது. ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை மிடாஸ் நிறுவனத்திடம் இருந்துதான் கிட்டத்தட்ட மொத்த கொள்முதலும் நடந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தினகரனுக்கு மோதல் ஏற்பட்ட பின்னர் மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யும் அளவை டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.

இந்த நிலையில் தற்போது மிடாஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை நடந்ததை அடுத்து இனிமேல் அந்நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டாம் என்று டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதற்கு பதிலாக தி.மு.க., ஆதரவு நிறுவனங்களான, 'எஸ்.என்.ஜே., கல்ஸ் மற்றும் பிற நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments