Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் சரக்கு திருடிய டாஸ்மாக் ஊழியர்: கைது செய்த போலீஸார்!

Webdunia
திங்கள், 11 மே 2020 (08:28 IST)
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியர் ஒருவரே மதுபானங்களை திருடி விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இரண்டு நாட்கள் திறக்கப்பட்டுவிட்டு மீண்டும் மூடப்பட்டதால் பிறகு வாங்கி கொள்ளலாம் என அலட்சியமாக இருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி துவாக்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் தான் பணிபுரியும் டாஸ்மாக் கடையிலிருந்தே மது பாட்டில்களை திருடி வெளியே அதிக விலைக்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மேற்பார்வையாளர் கார்த்திக்கேயனை கைது செய்ததுடன், விற்றது போக அவரிடம் எஞ்சியிருந்த 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments