Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்றவர் மீது துப்பாக்கி சூடு: நீலகிரியில் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (07:24 IST)
நீலகிரியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க வந்த கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தலாடி என்ற பகுதியில் டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க கொள்ளையர்கள் இருவர்  முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அடைந்த காவல் துறையினர் உடனடியாக சென்று கொள்ளையனை பிடிக்க முயன்ற போது கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது 
 
மேலும் கொள்ளையர்களில் ஒருவன் போலீசார் மீது கத்தியால் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து போலீசார் கொள்ளையன் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் காயமடைந்த கொள்ளையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
முதல் கட்ட விசாரணையில் கொள்ளையன் பெயர் மணி என்று அறியப்பட்டது. இந்த நிலையில் காயம் அடைந்த கொள்ளையன் மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக வலை வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments