Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபான பார்களை கண்காணிக்க வேண்டும் –அமைச்சர் செந்தில் பாலாஜி

Senthil Balaji
, செவ்வாய், 23 மே 2023 (21:45 IST)
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அரசு மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலக்கு மதுபானம் விற்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

இந்த நிலையில், இன்று சென்னையில் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.

அதில்,  டாஸ்மாக் கடைகள் உத்தரவிடப்பட்டுள்ள நாட்களில் மூடப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்ய வேண்டும். மதுபான பார்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். ஆலை உற்பத்திற்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். கடலோர மாவட்டங்களில் மாநில எல்லைகளில் வெளிமாநில மது, சாராய விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், ஆலை உரிமைதாரர்களிடம் மெத்தனால் விற்கப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணத்திற்கு வராமல் ஓட முயன்ற மணமகன்...20 கிமீ தூரம் துரத்திப் பிடித்த மணமகள் !