Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? தஞ்சை ஆட்சியர் கேள்வி..!

Siva
புதன், 10 ஜனவரி 2024 (07:14 IST)
மழை பெய்தால் பள்ளிகளுக்கு ஏன் விடுமுறை விட வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் மிதமான மழை அல்லது கன மழை பெய்தால் உடனே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்படும். 
 
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் இது குறித்து கூறிய போது  மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய தூறல் வந்துவிட்டாலோ பெற்றோர்கள் எனக்கு போன் செய்து பள்ளிக்கு விடுமுறை உண்டா என்று கேட்கின்றனர். 
 
மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை வேண்டும்?  நான் கேரளாவை சேர்ந்தவன். அங்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் மழை தொடங்கிவிடும். மழையில் நடந்தபடியே பள்ளிக்கு செல்வேன். மழைக்காக விடுமுறை என நான் நினைத்து வீட்டில் இருந்திருந்தால் என்று உங்கள் முன் கலெக்டராக இருந்திருக்க மாட்டேன். 
 
தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். வாழ்க்கையில் கல்வி மட்டுமே மற்றவர்களால் திருட முடியாத சொத்து என்று கூறியுள்ளார் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments