Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! 4 நாட்களுக்கு நல்ல மழை!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (15:04 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டல மாண்டஸ் புயலாக வலுவடைந்து கரையை கடந்தது.

இந்நிலையில் தற்போது கேரளா – கர்நாடகா கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்

டிசம்பர் 14 முதல் 17ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமானது வரை தொடர் மழைப்பொழிவு இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments