Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மற்றும் பிள்ளைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:59 IST)
திருவண்ணாமலை மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிசாமி(40).

இவரது மனைவி வள்ளி(37) மகள்கள் திரிஷா(15), மோனிஷா(14), மகாலட்சுமி(6) ஆகிய மகள்களும், சக்தி(6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக  தன் மனைவி, மகள்கள் மற்றும் மகனை கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் பழனிசாமி.
இதுகுறித்து, அருகில் வசிப்போர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments