Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மற்றும் பிள்ளைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கணவன்!

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (14:59 IST)
திருவண்ணாமலை மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பழனிசாமி(40).

இவரது மனைவி வள்ளி(37) மகள்கள் திரிஷா(15), மோனிஷா(14), மகாலட்சுமி(6) ஆகிய மகள்களும், சக்தி(6) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக  தன் மனைவி, மகள்கள் மற்றும் மகனை கோடரியால் வெட்டிக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் பழனிசாமி.
இதுகுறித்து, அருகில் வசிப்போர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பிரேதங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments