Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (14:41 IST)
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த சில நாட்களுக்கு திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 27ம் தேதி அன்று வட மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments