Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் வேலை வாய்ப்புகள் – லிங்க் உள்ளே

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (09:31 IST)
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையில் காலியாக உள்ள 6 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்பி தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தி வருகிறது. அண்மையில் குரூப் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் அதையடுத்து தற்போது தொழிலாளர் நலத்துறைக்கான தேர்வுகளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை மதுரைப் பிரிவில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான தேர்விற்கு வரும் டிசம்பர் 28 ஆம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். 18 வயதுப் பூர்த்தியான அனைவரும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான ஊதியமாக ரூ 15700 முதல் ரூ 50000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்கான லிங்க்
https://drive.google.com/file/d/1pYMuuA7ajNSgWfME48m7jR4rlKolJckH/view

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments