Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சில மணி நேரங்களில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: எப்பேர்ப்பட்ட மழையையும் சமாளிக்கலாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments