Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த சில மணி நேரங்களில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?

Webdunia
ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (09:56 IST)
தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல சுழற்சியால் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முதலாக மழை பொழிவு அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்துள்ளது.

இந்நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ALSO READ: எப்பேர்ப்பட்ட மழையையும் சமாளிக்கலாம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments