Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் தக்காளி; வெளிமாநிலங்களில் இறக்குமதி! – தமிழக அரசு நடவடிக்கை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (14:56 IST)
தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழக மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களில் தக்காளி விலை கிடுகிடுவென விலை உயர்ந்தது. இந்நிலையில் இதை சமாளிக்க அரசு பசுமை பண்ணைகள் மூலமாக குறைந்த விலைக்கு தக்காளியை மக்களுக்கு வழங்கி வருகிறது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி “மகாராஷ்டிரா உள்ளிட்ட மழை பொழிவு அதிகமில்லாத மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தக்காளியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் உள்ள முக்கியமான ரேசன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

அடுத்த கட்டுரையில்
Show comments