Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் வந்தால் இ-பாஸ்; 14 நாட்கள் தனிமை! – தமிழக அரசு கெடுபிடி!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (14:05 IST)
நாளை முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான விதிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை (மே25) முதல் விமான சேவைகளை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் ஜூன் 1 வரை விமான சேவைகளை ஒத்தி வைக்க முதல்வர் பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எனினும் விமான பயணம் தொடங்கும் பட்சத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, விமானத்தின் மூலம் தமிழகம் வருபவர்கள் கண்டிப்பாக ஆன்லைன் பாஸ் பெற வேண்டும்.

விமான டிக்கெட் பெற்றவுடன் இ-பாஸ் வலைபக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் எந்த விமான நிலையத்திற்கு வந்து சேருவர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
பயணிகள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்

காய்ச்சல். இருமல், சுவாசப் பிரச்சினைகள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments